×

காதப்பாறை வெண்ணைமலை சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

கரூர், ஏப்.16: காதப்பாறை வெண்ணைமலை சாலையோரம் குப்பை குவியலால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கரூர் நகராட்சியை அடுத்துஉள்ள ஊராட்சி காதப்பாறை. நாளுக்குநாள் குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள், பெருகிக்கொண்டேவரும் பகுதி. கல்லூரிகள் பள்ளிகள் என இந்த ஊராட்சியில் அதிகம் உள்ளது. கிட்டத்தட்ட நகர பகுதியைபோன்று உள்ள இந்த ஏரியா பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் இருக்கிறது. குப்பைமேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.போதுமான சுகாதார பணியாளர்களும் இல்லை.கரூர் வெண்ணைமலை சாலையில் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. பஞ்சாயத்து அலுவலர்கள் இதனை அகற்றாததால் மலைபோல குவிந்துவிட்டது. போதுமான குப்பைதொட்டிகள் வைக்கப்படாததால் மலைபோல குவிந்துகிடக்கிறது. அவ்வப்போது  மழைதூறல் விழுவதால் மக்கிப்போய் கொசுத்தொல்லை போன்ற சுகாதாரகேட்டில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.வரிமட்டும் கேட்கின்றனர் ஆனால் அடிப்படைவசதிகளை செய்வதில்லை. குறிப்பாக குப்பைகளை குவிய விட்ட பின்னரே அப்புறப்படுத்துகின்றனர். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collapse ,road ,Kallapara Vennaiyalai ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...